ஊராட்சி தேர்தல் (Local Body Election) என்பது தமிழக அரசியல் களத்தில் மிக மிக வித்தியாசமான ஒரு தேர்தல்.
அரசியலில் சாதிக்க நினைப்பவர்கள்.. அரசியல் மூலமாக மக்கள் தொண்டாற்ற நினைப்பவர்களுக்கான மிக பெரிய வாய்ப்பு தான் உள்ளாட்சி தேர்தல்…. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, திறம்பட மக்கள் பணி ஆற்றி அதன் மூலம் எம்.எல்.ஏவாகி, அமைச்சர் ஆகியவர்கள் ஏராளம் … ஆக மொத்தத்தில் இது தான் எல்லாவற்றுக்கும் அடித்தளம், இது தான் முதல் படி…
ஆளுங்கட்சியோ எதிர்கட்சியோ…எந்த கட்சியில் சீட்டு வாங்கி வேட்பாளராக நின்றாலும்… மக்கள் செல்வாக்கு இல்லையென்றால் இந்த உள்ளாட்சி தேர்தலில் தோற்று போவது உறுதி. ஏனென்றால் உள்ளாட்சி தேர்தல் தனிப்பட்ட செல்வாக்கு தொடர்புடையது.
சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் , கட்சியின் சின்னத்தை பார்த்தே வாக்களிப்பார்கள்.. கட்சியே வாக்குகளை தீர்மானிக்கும். ஆனால் உள்ளாட்சி தேர்தல் அப்படி அல்ல… ஒரு தனிப்பட்ட நபரின் செல்வாக்கு தான் வெற்றியை உறுதி செய்யும். உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை மக்களின் பார்வை மற்ற தேர்தலை காட்டிலும் வித்தியாசமானது. வேட்பாளர் எப்படி பட்டவர், அவரை எளிதில் அணுக முடியுமா என்பதை பார்ப்பார்கள்…
சட்டமன்ற தேர்தல்களை பொறுத்த வரையில், எம்.எல்.ஏக்களை ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்து, 5 வருட காலங்களில் பார்க்கவேண்டிய காரணமும் தேவையும் இருக்காது. ஆனால் கவுன்சிலர் அப்படி இல்லை…
குறைந்தது, ஊரில் 70 சதவிகித பேராவது, ஏதாவது ஒரு காலகட்டத்தில் கவுன்சிலரை சந்தித்தாக வேண்டிய தருவாய் நிச்சயம் ஏற்படும். அப்போது வேட்பாளர் எளிதில் அணுக கூடியவரா, நல்ல மனம் படைத்தவரா, சேவை மனப்பான்மை கொண்டவரா, என்பதை பார்த்தே மக்கள் வாக்குகளை செலுத்துவார்கள்… அந்த அளவுகோலில் பார்க்கும் பொழுது நீங்கள் அவர்களுக்கு நம்பிக்கை தர கூடிய வேட்பாளர்களா இருக்குறீர்களா என்பதே முக்கியம்.
தேர்தல் வெற்றிக்கான வியூகங்கள் ஒவ்வொரு தேர்தலுக்கும் மாறிக் கொண்டே இருக்கிறது. தற்போதைய தேர்தல் களம் கடந்த காலங்களைப் போன்றதல்ல. 24 மணி நேர செய்தி தொலைகாட்சிகள், சமூக வலைதளங்கள், வாட்சாப் பகிர்வுகள் ஆகியவை மக்களை ஆட்கொண்டுள்ளதால் மக்களின் மனோபாவம் வெகுவாக மாறிவிட்டது. இன்று சமூக வலைதளம் மற்றும் தொலைகாட்சிகள் மூலம் ஒரே நாளில் ஒருவரை ஹீரோவாகவும் ஆக்க முடியும் உச்சபட்ச பிரபலமாக இருப்பவரை ஜுரோவாகவும் ஆக்க முடியும். அதற்க்கு சமீபத்திய சான்றுகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஒவ்வொரு வேட்பாளருக்கும், வெவ்வேறு வகையான உத்தியைக் கையாண்டால் மட்டுமே தேர்தல் வெற்றி சாத்தியம். அதாவது ஒவ்வொரு பிரிவு வாக்காளர்களின் எண்ண ஓட்டத்தை, நாடி துடிப்பை அறிந்து அதற்கேற்ற தேர்தல் உத்தியை வகுப்பது அவசியமாகிறது. அதோடு சமூக வலைதளம் மற்றும் தொலைகாட்சி மூலம் முன் வைக்கப்படும் குற்றச்சாட்டு மற்றும் விமர்சனங்களையும் திறமையாக எதிர்கொண்டு முறியடிப்பது முக்கியாமானது.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அணுகுமுறையும், பிரசாரமும் தேவைப்படுகிறது. அதுதான் ‘கம்யூனிகேஷன்’ (Communication Narrative).
அந்த கம்யூனிகேஷனை ஒவ்வொருவருக்கும் ஏற்றபடி கொண்டு சேர்ப்பது, வெற்றிகரமான தேர்தல் உத்தியை வகுப்பது ( Political Strategy) மற்றும் ஆலோசனைகள் வழங்குவது போன்றவற்றை 7MPS நிறுவனம் கைதேர்ந்த கலையாகக் கொண்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் தேர்தல் உத்தி வகுப்பாளராக செயல்பட்டுள்ளது.
தேர்தல் வெற்றிக்காக பணி செய்ய ஒப்புக்கொண்ட வேட்பாளர்களின் வெற்றியை, தனக்கே உரிய பிரத்யேகமான செயல்பாடுகள் மற்றும் அணுகுமுறை மூலம் சாத்தியமாக்கி உள்ளது.
7MPS நிறுவனத்தின் சிறப்பியல்பே, புள்ளி விவரங்களை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் மக்களின் மனோவியலையும் அடிப்படையாக கொண்ட வெற்றி வியூகங்களை வகுப்பதுதான்.
அது குறித்த விரிவான ஆலோசனைகள் மற்றும் திட்டங்களை முன் வைப்பதற்காக, உங்களைச் சந்திப்பதற்கான நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
உங்கள் வெற்றிக்கு உழைத்திட நாங்கள் தயாராக இருக்கிறோம்.
OUR SERVICES
Research
Data Mining
Data based Analytics
Surveys
Customized Political Strategy
Constituency Profiling
Voter base Profiling
Voter Swing planning
Exclusive manifesto
Personalised Branding
Brand Value of the Candidate
Insights on strengths and Weakness
Customized Posturing
Positive story building
Media Management
Media Influence
Monitoring of Coverage
Crisis Management
Mitigation of Negative campaign
Early sensing of crisis
Main stream and Digital Marketing
Social Media & Youtube
Digital Influencer
WhatsApp, SMS, Voice Call
We Plan and Execute your Political Campaign effectively
For more information –
Email: [email protected]
Mobile: +91 98410 21066