வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல், தமிழக அரசியல் வரலாற்றில் மிக மிக வித்தியாசமான ஒரு தேர்தல் களாமாகும். ஒவ்வொரு தேர்தல் நெருக்கத்திலும் மக்களிடம் காணப்படும் கட்சி சாரந்த ஆதரவு அலை இல்லை. மாறாக அனைத்து கட்சி மீதும் அதிருப்தியும், நம்பிக்கையற்ற தன்மையும் மேலோங்கியுள்ளது.
தமிழகத்தின் தேர்தல் அரசியல் சக்கரம், கால் நூற்றாண்டு காலமாக கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரைச் சுற்றியே இயங்கியது என்றாலும், இன்றைய காலகட்டத்தில் அவர்களின் புகழ் பாடினால் மட்டும் மக்கள் வாக்களித்து விட மாட்டார்கள். பழங்கதை பேசுவதை மக்கள் கண்டுகொள்வதில்லை. முக்கியமாக இளம் வயது வாக்காளர்களை அது ஈர்ப்பதில்லை.
தேர்தல் வெற்றிக்கான வியூகங்கள் ஒவ்வொரு தேர்தலுக்கும் மாறிக் கொண்டே இருக்கிறது. தற்போதைய தேர்தல் களம் கடந்த காலங்களைப் போன்றதல்ல. 24 மணி நேர செய்தி தொலைகாட்சிகள், வாட்ஸாப் பகிர்வுகள், சமூக வலைதளங்கள் உள்ளிட்டவை மக்களை ஆட்கொண்டுள்ளதால், அவர்களின் மனோபாவம் வெகுவாக மாறிவிட்டது. இன்று சமூக வலைதளம், வாட்ஸாப் பகிர்வுகள் மற்றும் தொலைகாட்சிகள் மூலம் ஒரே நாளில் ஒருவரை ஹீரோவாகவும் ஆக்க முடியும் உச்சபட்ச பிரபலமாக இருப்பவரை ஜுரோவாகவும் ஆக்க முடியும். அதற்க்கு சமீபத்திய சான்றுகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
கட்சியையும் அதன் சின்னத்தையும் சார்ந்து மட்டுமே வாக்களித்த காலம் மலையேறிவிட்டது. வேட்பாளரின் தனிப்பட்ட நற்பெயர், சாதனைகள் மற்றும் செயல் திறனை ஆராய்ந்தே வாக்களிக்கும் நிலையே தற்போது ஏற்ப்பட்டுள்ளது.
எனவே ஒவ்வொரு வேட்பாளருக்கும், தொகுதிக்கும், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வெவ்வேறு வகையான உத்தியைக் கையாண்டால் மட்டுமே தேர்தல் வெற்றி சாத்தியம். அதாவது தொகுதி அல்லது மாவட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு பிரிவு வாக்காளர்களின் எண்ண ஓட்டத்தை, நாடி துடிப்பை அறிந்து அதற்கேற்ற தேர்தல் உத்தியை வகுப்பது அவசியமாகிறது. அதோடு சமூக வலைதளம் மற்றும் தொலைகாட்சி மூலம் முன் வைக்கப்படும் குற்றச்சாட்டு மற்றும் விமர்சனங்களையும் திறமையாக எதிர்கொண்டு முறியடிப்பது முக்கியாமானது.
அனைத்து வாக்காளர்களையும் பணத்தாலோ, இலவசர அறிவிப்புகளால் மட்டுமே கவர்ந்திழுத்து விட முடியாது. அப்படி கவரப்பட்டவர்களும் குறிப்பிட்ட கட்சிக்கு தான் வாக்களிப்பார்கள் என்ற எந்த உத்தரவாதமும் இல்லை.
பொதுவாக கட்சி சார்ந்து வாக்களிப்பார்களை விட நடுநிலை வாக்களர்களின் வாகுங்களே வெற்றி, தோல்வியை தீர்மானிப்பது தான் வரலாறு. கடந்த தேர்தல் முடிவுகளை ஆராய்ந்து பார்த்தீர்கள் என்றால், வெற்றி தோல்விக்கான சதவீதம், 2 சதவீதத்திற்க்கும் குறைவானதாகவே இருக்கும்.
இந்த வெற்றியை தீரமானிப்பவர்கள் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், அமைப்பு சாரா பணியாளர்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்களை நடத்துவோர், தொழிலதிபர்கள், வியாபாரிகள், வர்த்தகர்கள், இளைஞர்கள், மாணவர்கள் எனப் பல பிரிவினராக பிரிந்து கிடக்கின்றனர். எனவே தேர்தல் வெற்றிக்கு இவர்கள் ஒவ்வொருவரிடத்திலும் ஒவ்வொரு விதமான அணுகுமுறையை முன்னெடுப்பது அவசியமாக உள்ளது.
கடந்த 10 ஆண்டு காலமாக அதிமுகவே தொடர்ந்து ஆட்சியில் இருந்து வருவதால், ஒவ்வொரு தொகுதி அல்லது மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கும். இவையெல்லாம் நமக்கு சாதகமானதுதான் என்றாலும், இவற்றில் எந்த பிரிவினரிடத்தில் எந்த சாதனையை அல்லது நிறைவேற்றப்பட்ட திட்டத்தைக் கொண்டு செல்வது என்பதை முடிவு செய்வது மிக முக்கியமானது.
அதேபோன்று ஆட்சிக்கு எதிரான குறைகள் அல்லது தொகுதியில் நிறைவேற்றப்படாத பிரச்சனைகளின் அடிப்படையில் தொகுதி மக்களிடம் ஆட்சி மீது இருக்கும் எதிர்மறையான எண்ணம் என்ன, எங்கே தட்டினால் அந்த எண்ணம் மாறும், எப்படி இவர்களை அதிமுகவுக்கு சாதகமாக வாக்களிக்க வைக்கலாம் என்பதைத் தீர்மானிக்க, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அணுகுமுறையும், பிரச்சாரமும் தேவைப்படுகிறது. அந்த உத்தியை Narrative Communication என குறிப்பிடுவார்கள்.
அதாவது ஒவ்வொருவருக்கும் ஏற்றபடி கொண்டு சேர்ப்பது, வெற்றிகரமான தேர்தல் உத்தியை வகுப்பது ( Political Strategy) மற்றும் ஆலோசனைகள் வழங்குவது போன்றவையாகும். இதில் எங்கள் 7MPS நிறுவனம் கைதேர்ந்த நிபுணத்துவத்தை கொண்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் தேர்தல் உத்தி வகுப்பாளராக செயல்பட்டுள்ளது.
தேர்தல் வெற்றிக்காக பணி செய்ய ஒப்புக்கொண்ட கட்சி வேட்பாளர்களின் வெற்றியை, தனக்கே உரிய பிரத்யேகமான செயல்பாடுகள் மற்றும் அணுகுமுறை மூலம் சாத்தியமாக்கி காட்டி உள்ளது.
7MPS நிறுவனத்தின் சிறப்பியல்பே, புள்ளி விவரங்களை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் மக்களின் மனோவியலையும் அடிப்படையாக கொண்ட வெற்றி வியூகங்களை வகுப்பதுதான்.
உங்கள் மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறவும், தற்போதைய அதிமுக ஆட்சியைத் தக்க வைப்பதற்கான பங்களிப்பில் உங்கள் மாவட்டத்தின் தொகுதிகளில் கிடைக்கக்கூடிய வெற்றியும் காரணமாக அமையும் வகையிலும் 7MPS நிறுவனம் முதல்கட்டமாக உங்கள் முன் வைக்கும் திட்டம்தான் 30 X 3 திட்டம். அதாவது தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஏறக்குறைய 4 மாதங்களே, அதாவது 120 நாட்களே மீதம் உள்ள நிலையில், ஒவ்வொரு 30 நாட்களையும் 3 கட்டங்களாக (Phases) பிரித்து பிரச்சார மற்றும் தேர்தல் உத்திகளை மேற்கொள்வது.
அது குறித்த விரிவான ஆலோசனைகள் மற்றும் திட்டங்களை முன் வைப்பதற்காக, உங்களைச் சந்திப்பதற்கான நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
உங்கள் வெற்றிக்கு உழைத்திட நாங்கள் தயாராக இருக்கிறோம்.
OUR SERVICES
Research
- Qualitative and Quantitative Research
- Data Mining
- Data based Analytics
- Surveys
Customized Political Strategy
- Candidate and Constituency centric Political strategy
- Constituency Profiling
- Voter base Profiling
- Voter Swing planning
- Exclusive manifesto
Personalised Branding
- Individual as a brand
- Brand Value of the Candidate
- Insights on strengths and Weakness
- Customized Posturing
- Positive story building
Media Management
- Media Planning
- Media Influence
- Monitoring of Coverage
Crisis Management
- Reputation Protection and Building
- Mitigation of Negative campaign
- Early sensing of crisis
Main stream and Digital Marketing
- Print & Television
- Social Media & Youtube
- Digital Influencer
- WhatsApp, SMS, Voice Call
We Plan and Execute your Political Campaign effectively
For more information –
Email: [email protected]
Mobile: +91 98410 21066